Varalskhmi Puja vithanam

பூஜை அறை அலங்காரம்
பூஜைக்கு முதல் நாளே வீட்டை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிடவும்
அம்மனின் திருவுருவ படத்தை சுவற்றில் அவரவர் போல சம்பிரதாயம்படி வரையவும்

அல்லது பூஜை அறையில் மண்டபமோ வீதானமோ அமைத்து அலங்கரிக்கவும்

மண்டபத்தின் இரு பக்கங்களிலும் வாழைக்கன்றை கட்டி அலங்காரம் செய்யவும்

கலச அலங்காரம் முதலில் தோரணங்களால் அலங்கரிக்கவும்
கலசத்திற்கு உள்ளே தங்கம் வெள்ளி செம்பு அவரவர் சமுதாயம்படி அரிசி அல்லது தீர்த்தம் நிரப்பி கொள்ளவும்

பிறகு அதில் எலுமிச்சம் பழம் வெற்றிலை பாக்கு முழு நாணயம் இவைகளை போடவும்

மாவிலை கொத்தையும் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து அதன் மேல் ஸ்ரீ வரலட்சுமி அம்மன் முகத்தை வைக்கவும்

அதன் மேல் வஸ்திரம் ரவிக்கை துணி ஆபரணங்கள் அணிவிக்கவும்

வீட்டின் கிழக்கு பக்கமாக நுனி வாழை இலையைப் போட்டு நெல்லை பரப்பி பிறகு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி அதன் மேலே கலசத்தை வைத்து பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்யவும் கற்பூரகாரத்தை எடுக்கவும் பிறகு உள்நிலை படியிலிருந்து அம்மனை அழைத்து வரும் ஆவனையுடன் கொண்டு வைத்து கலசத்திற்கு முன்னால் ஸ்தோத்திரங்களையும் கூறி லட்சுமி ரவி என்ற பாடலை பாடி மங்களகரமான பாடலை பாடி அம்மனை உள்ளே அழைத்து மண்டபத்தில் அமர்த்தவும்